Monday 4 April 2011

என் மண்ணும் மக்களும்

             இதுவரை எத்தனையோ சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள தமிழகம் , இந்த முறை ஒரு புதிய எதிர்பார்ப்புடன் தேர்தல்ஐ எதிர்கொள்கின்றது . திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் எதிர் எதிரே போட்டியிடுகின்றன. 



              இந்த தேர்தலிலே இரு கூட்டணிகளும் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. மடிக்கனணி தொடங்கி மின் விசிறி வரை எல்லாம் இலவசம் . ஆனால் இது மாதிரியான இலவச திட்டங்கள் எத்தனை தூரம் ஆரோக்கியமானது என்று சிந்தித்தோமேயானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.இது மாதிரியான இலவசங்கள் தமிழகத்தை எப்படி முன்னேற்றும்? அல்லது இதை தவிர வேறு என்ன மாதிரியான முன் மாதிரி முன்னேற்ற  திட்டங்கள் இவர்களிடம்  உள்ளது என்பது மாதிரியான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

              ஒரு அரசாங்கத்தின் அடிப்படை சேவையான கல்வியும், மருத்துவமும் இன்று தனியார் வசம் , இந்த துரதிஷ்டத்துக்கு யார் காரணம்   என்றால், இருவருமே ஒருவரை ஒருவர் குறை கூறி குற்றம் சாட்டுகின்றனர். இதில் விழி பிதுங்கி , வழி தெரியாமல் முழிப்பவர்கள் அப்பாவி தமிழர்கள் தான் .ஆனால் இன்றுவரை இந்த இலவசங்களை வேண்டாம் என கூற யாருக்குமே தைரியமும் , துணிவும் இல்லை , நான் வேண்டாம் என்றால் மற்றொருவன் வாங்கி கொள்வான் என்ற சராசரி எண்ணம் நமக்கு, நான் உள்பட .

            ஆனால் என்னால் சகித்து கொள்ளவே முடியாத இரண்டு விஷயங்கள் 

ஒன்று . தமிழக புவியியல் சார்ந்தது

இரண்டு . தமிழர்களின் உடலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது , 

அவை ...........................................................................
மணலும் , மதுவும் .

இரண்டுமே இன்று அரசாங்கத்திற்கும் , அரசியல்வாதிகளுக்கும் தங்கம் தரும் சொர்க்க சுரங்கங்கள் .மேற்கண்ட இரண்டுமே சென்ற ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தான் என்றாலும் , அதை முழுமை படுத்தி முழுமை அடைந்தது இன்றைய ஆட்சியாளர்கள் தான் .மிகக்கொடுமையாக  ஆற்றையும் , ஆளையும் அழிக்கும் பேரழிவுகள் இவை . ஆனால் இதை பற்றி எந்த கவலையும் இந்த அரசியல் வாதிகளுக்கு இல்லை , இயற்கை தந்த உடலையும் , இயற்கை தன்னை தானே காத்துக்கொள்ள உபயோகமான ஆறுகளையும் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவர்கள் இப்படி கொன்று  அழிப்பது வருங்கால சந்ததியினருக்கு இவர்கள் இழைக்கும் துரோகம். இவர்களின் கட்சி பெயரிலும், கட்சியினருக்கும் தாம் முன்னேற்றம் ,தமிழகத்திற்கு எதுவுமே இல்லை .



                           நம் நாட்டின் நீராதாரத்தை அழிக்கும் இது மாதிரியான செயல்கள் இந்த நாட்டை எந்த விதத்தில் முனேற்ற  பாதைக்கு அழைத்து செல்லும் . இயற்கை வளங்கள் ஒரு அரசாங்கத்தாலேயே இப்படி சுரண்டப்பதுவது வேறு எங்காவது உண்டா .ஒரு அடி ஆற்று மணல் சேர 240 ஆண்டுகள் ஆகும் என்கிறது புவியியல் சொல்லும் அறிவியல் , இன்று இவர்கள் எத்தனை ஆண்டு இயற்கையின் உழைப்பை தோண்டி துருவி எடுத்திருக்கிறார்கள் , 1500 ஆண்டுகளுக்கு முன்பு  ஆறுகளை வெட்டி , கல்லணை அமைத்த மன்னராட்சி எங்கே , இன்று மக்களால் பதவி பெற்று மக்களாட்சி என்று கூறிக்கொண்டு இயற்கை வளத்தை வளைத்து அழிக்கும் இவர்கள் எங்கே இவர்களா மக்கள்  நலனில் அக்கறை கொள்ளப்போகிறார்கள்.


                         குடி குடியை கெடுக்கும் என்பது எல்லோரும் அறிந்த, புரிந்த தெரிந்த ,தெளிந்த சேதி , அனால் இன்று தமிழகத்தில் நடப்பது என்ன அரசாங்கமே காலையிலிருந்து இரவு வரை கடை விரித்து மடை திறக்கும் வினோத அநியாயம் , தரணி எங்கும் தாராள தண்ணீர் மயம்.ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் இந்த குடி பழக்கம்  குழப்பம் ஏற்படுத்தாத நாளே இல்லை . வியாபார நோக்கில் நடத்தப்படும் இந்த மதுக்கடைகள் , எங்கெங்கு இருக்கலாம் என்ற வரைமுறையோ, வழிமுறையோ,விதிமுறையோ கிடையாது , சேர்ந்தாற்போல் ஒரு 10 நபர்கள் இருந்தால் கூட  அங்கு ஒரு கடை திறக்க நம் அரசாங்கம் ரெடி . கோயில்,பள்ளி , கல்லூரி, ஆன்மீக கூடங்கள் என எங்கும் மதுக்கடைகள் தான் ,தமிழ் குடிமகன்கள் , குடிகாரர்களாகி தன்னிலை இழந்து மதி மறந்து , ஒழுக்கம் துறந்து மூளை மழுங்கி மூலைக்கொருவராய் மல்லாந்து கிடப்பதை பாக்கும் போது, என் ரத்தம் கொதிக்கின்றது, இந்த இழி நிலையை இளைஞர்களுக்கு தந்த இந்த மாண்பில்லா மக்கள் ஆட்சியாளர்களை நினைத்து கோபம் கொப்பளிக்கிறது .

தன் ஒருநாள் ஊதியத்தில் முக்கால் பங்கு ஊத்திக்கொ(ல்ல)ள்ளவே என் சக தமிழன் செலவழிக்கிறான் , மீதம் உள்ளதே மனைவி மக்கள் உணவிற்கும் , உடமைக்கும் , எங்க கையை எடுத்தே எங்கள் கண்ணை குத்திவிட்டு பின் எங்களுக்கு கண்ணாக இருப்போம் என வீர வசனம் பேசும் இந்த அரசியல் தலைவர்களை வருங்காலம் மன்னிக்காது. 


இந்த கொடுமையை தொடங்கியது ஜெயலலிதா தொடர்வது கருணாநிதி , இந்த துரோகத்தில் இருவருக்குமே சரி சம பங்கு உள்ளது .இருவருமே சுயநலக் கொள்கை கொண்டவர்தாம். 

   என் மக்களையும் மண்ணையும் அழிக்கும் இந்த கோர கொடூர கொடுமையிலிருந்து மக்களையும் மண்ணையும் காப்போம் என இரு கழகங்களும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதது தான் உலகின் உச்சக்கட்ட அராஜகம். இலவசங்களால் அடித்து இந்த இனிய நாட்டை இழி நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கும் இந்த இரு கழகங்களும் நாட்டுக்கு நல்லது செய்யப்போவதில்லை .கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசியல்வாதிகளை கல்லை கொண்டு அடிக்கும் காலம் என்று வருமோ ?????  


 மாற்றம் வேண்டும்.............. அதற்கு நாம் முதலில் மாற வேண்டும், அப்படியும் மாற்றம் வரவில்லையெனில் நாம் தான் மற்றவரை மாற்றவேண்டும் 

நிறைவாய் .........
அரசியல்வாதிகளே
 நீங்கள் உணரவேண்டியது ஒன்று உண்டு அது
தமிழர்கள் சகித்துக்கொண்டு இருக்கவில்லை ,
 உள்ளே உங்களை 
எண்ணி தகித்துகொண்டு இருக்கிறார்கள் ................ 

அன்பன் 
ARR
   

7 comments:

பெசொவி said...

I think you can think of a different template. Somehow, it doesn't look nice.

Anyway, your way of writing is nice.

Keep it up!

பெசொவி said...

Please take out the word verification from comments setting.

Hope RVSM will help you know about it!

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2011/04/11042011.html

A.R.ராஜகோபாலன் said...

Dear Friend(பெயர் சொல்ல விருப்பமில்லை)
Thanks for honest comment, i will try to improve my self........
Regards
A.R. Rajagopalan

A.R.ராஜகோபாலன் said...

Dear Friend
yes u r right
i dont understand about "Please take out the word verification from comments setting."
any way thanks for your comments
Regards
A.R. Rajagopalan

A.R.ராஜகோபாலன் said...

மிக்க நன்றி எல் கே..,
தங்களின் இந்த அறிமுகம் , என்னை இவர்களிடம்அறிந்தமுகமாக்கும்.என்பதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கூடவே நெகிழ்ச்சி.
என்மீதான உங்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்ற முயற்சிப்பேன் .
அன்பன்
ARR

A.R.ராஜகோபாலன் said...

Please take out the word verification from comments setting.
ஹலோ அன்பு வெங்கடேசன்
நலமா ?? ரொம்ப சந்தோஷம் நீங்கள் (நீ) வந்ததில் , கருத்து தந்ததில்
நீங்களே அதை பற்றி (வெரிபிகேசன் )சொன்னால் நலமாய் இருக்கும் எனபது எனது கருத்து , மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்
அன்பன்
ARR