Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Monday, 11 July 2011

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

 
                      சென்ற ஞாயிற்று கிழமை ஏதேச்சையாக சூர்யா சேனலில் மலையாள படம் டுவன்டி : டுவன்டி (twenty :20) பார்த்தேன், பிரமித்தேன் மலையாள படவுலக அத்தனை பிரபலங்களும் பிரகாசமாய் நடித்திருக்கும் படம், மோகன் லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,திலீப் ,ஜெயராம் , இன்னும் எனக்கு பெயர் தெரியாதா பிரபலங்களும் நடித்திருந்தனர், ஒருவருக்கொருவர் துளியும் ஈகோ இல்லாமல் (இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ) தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர்.



           அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக  இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன.,  .

           இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால்  எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும்  தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.
           இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.


அன்பன் 
ARR