Monday 12 November 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி பல நினைவுகளை
தீண்டிச் செல்லும்
தித்திக்கும் 
திரு நாள்

நமக்காக மட்டுமின்றி
நம் இதய இருப்புக்காகவும்
நம் விருப்பங்களை துறந்து
நம்முடை தேர்வு செய்த நாள்

படபட சரவெடிகளும்
பலகார பட்சணங்களும்
பகிறும் பாசமும்
பரிணமிக்கும் நாள்

அதிசயமாக முன்னெழுந்து
அவசரமாக குளித்து
அழகாக சிகை சீவி
அதிகமாக சந்தோஷிக்கும் நாள்

இன்று

எல்லாம் கடந்து
எளிமை இழந்து
என்னை மறந்து
எல்லை துறந்து
இன்னுமொரு விடுமுறை நாளாக தீபாவளி....

அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை




அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்





அன்பன்


ARR

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை //

அம்மாவுக்கு இணை இருக்கமுடியுமா !

தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை //

அன்புள்ள அம்மாவுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது தான்.

நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

தங்களுக்கும் இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

vgk

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்களு குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

கதம்ப உணர்வுகள் said...

வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அம்மாவின் கைமணத்தில் பலகாரங்கள் அன்புச்சுவையுடன் ஊட்டி விட அந்த நாளே திருநாளாக அமையும்....

அம்மாவின் மறைவுக்குப்பின்னர் அம்மாவின் ஆசியுடன் எல்லா பண்டிகைகளும் சிறப்பாகவே நடக்கும்...

அன்பு வாழ்த்துகள் ராஜகோபாலன்..

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரர் ARR (A.R.ராஜகோபாலன்) அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் வரும் உங்களது ஆக்கங்களை படிப்பவன்.

நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (23.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 23ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/23.html