
அது ஒரு மார்கழி மாத ஞாயிற்று கிழமை, மாலை அநேகமாக ஆறு மணி இருக்கும் லேசான மழைத் தூறல் தூறிக்கொண்டே இருந்தது, அன்று வீட்டிலிருந்து வெளியே வந்த நான், எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி இருக்கும் கேபிள் ரூமில் என் நண்பர்களில் ஒருவனான சதா.ராஜாவை( இவனை நம் பதிவுலக நண்பர்கள் RVSM - தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் மன்னைமைந்தர்களில் ஒருவன் மாதவனுக்கும் தெரியும்) பார்த்தேன், அருகில் சென்று பார்த்த போது அவன் கண்களில் கண்ணீர் எங்கள் ஹரித்திராநதியில் உள்ள பசங்க எல்லோருமே சிறுவயது முதல் நண்பர்கள், நாங்கள் செய்யாத வேலைகள் கிடையாது அடிக்காத லூட்டிகள் இல்லை , நாங்கள் பகிர்ந்தது கொள்ளாத விஷயங்களும் இல்லை அதனால் ஒருவருக்கு ஒன்று என்றால் மத்தவர்கள் துடித்து போய்விடுவோம் , அதனால் பதறியபடியே "என்னடா ஆச்சி ஏன் அழுவற" என்றேன் , அதற்கு அவன் மௌனமாய் தொடர்ந்து அழ இன்னும் குழப்பம் அடைந்த நான் "சொல்லு ராஜா என்னாச்சி ஏன் இப்படி அழற" என்று கேட்க்க , "ஒண்ணும் இல்ல கோப்லி எனக்கு வாழவே பிடிக்கல அதனால தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன் என்றான்" அழுதவாறே ( எங்களுக்கு அப்போது பதினைந்து வயது தான் இருக்கும் ) நான் அப்படியே ஆடிப்போயிட்டேன் , இது மாதிரியான அனுபவம் எனக்கு புதிது, என்ன செய்வதென்றே தெரியவில்லை , பதறியபடியே நான் அங்கும் இங்கும் ஓடி என் அண்ணன் ரமேஷ், நண்பர்கள் R.ஸ்ரீராம் மற்றும் முரளி ஆகியோரை அழைத்து வரவும் அவன் மயங்கி விழாவும் சரியாக இருந்தது , அப்போது மழையும் சற்று வலுக்க தொடங்கியது , நாங்கள் அவனை எழுப்ப முயற்சிக்க சற்றே நினைவுக்கு வந்தான் , உடனே அவனை சைக்கிளில் வைத்து எங்கள் குடும்ப டாக்டர் சந்திரசேகரிடம் (மன்னார்குடியில் தொண்ணூறு சதவீதம் அவரிடம் தான்) அழைத்து சென்றோம்.
அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தவர் என்ன மாத்திரை , எத்தனை மாத்திரை என்று கேட்க ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை அவனிடம் , முழித்தான் , உடனே அவர் பல்ஸ் நல்லா இருக்கு அதனால வீட்டுக்கு அழைச்சிகிட்டு போய் உப்பு தண்ணி குடுங்க பார்க்கலாம் ஏதாவதுன்னா ஜி ஹெச் க்கு அழைச்சிக்கிட்டு போங்க என்று கூறிவிட , மீண்டும் அவனை அழைத்து கொண்டு (எங்க வீட்டுக்கும் அவரின் மருத்துவ மனைக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம் இருக்கும்) ஹரித்திராநதி வந்து இரண்டு படி உப்பை ஒரு வாளியில் கலந்து குடிக்க சொன்னால் அதை குடி குடியென குடித்து விட்டு வாந்தி எடுக்கிறான், அவன் கண்ணுலேந்து எல்லாம் தண்ணியா வருது வாந்தியின் வேகத்தில, ஒரு வழியா வயிறு சுத்தமாக சோர்ந்து போய் அமர்ந்துட்டான். எங்களுக்கோ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த மாதிரியான உணர்வு .
அந்த களேபரம் எல்லாம் முடிந்தவுடன் இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் எப்போதும் உக்காரும் படித்துறையில் அமர்ந்திருக்கும் போது இப்பவாவது சொல்லுடா எத்தனை மாத்திரை முழுங்கின என்று நான் கேட்ட போது அவன் சொன்ன பதில் .............................................................
அரை மாத்திர கோப்லி, உடனே விட்டார் என் அண்ணன் அவன் கன்னத்தில் ஒரு அறை, ஏண்டா இந்த அரை மாத்திரைக்க்காகவா எங்களை இப்படி மழையில சைக்கிள்ள அலைய விட்ட என கேக்க, ஏன்டா இப்ப அடிக்கிறிங்க இதுக்கு தான் நான் அப்பவே சொல்லலே என்றானே பாக்கலாம் .......... அப்போது எங்களுக்கு கோவம் வந்தாலும் இப்போதும் நாங்கள் பேசி மகிழும் நினைவு அது .
அந்த அரை மாத்திரை தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன பாழப்போன காதல்தான்
மன்னை ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் ஏகாந்த சேவை செங்கமலத்தாயாருடன்
அன்பன்
ARR