Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 19 June 2011

ஏன் மக்கள் திருட்டு வி சி டி யில் படம் பார்க்கிறனர்

         

இன்று எல்லா தயாரிப்பாளர்களும் எதிர்க்கும் ஒரு விஷயம்,அவர்களை  பாதிக்கும் ஒரு விஷயம் என்றால் அது  திருட்டு வி சி டிதான் (இப்பெல்லாம் டி வி டி வந்தாலும் அது வி சி டி என்றே  அழைக்கபடுகிறது) இது அவர்கள் உழைப்பையும் பணத்தையும் விழலுக்கு இறைத்த நீர் போல பயனற்று ஆக்குகிறது  , படம் ரிலீசாகி  இரண்டாம் நாளே டி வி டி ரெடி, சில படங்கள் ரிலிசாவதற்கு முன்னமே திருட்டு டி வி டி வந்து விடுகிறது, இதற்கு காரணம் சரியான தேதியில் படங்கள் ரிலிசாகாமல்  இருப்பதுதான், குறிப்பிட்ட காலம் வரையே அவர்கள் டிவிடி வெளியிடாமல் இருப்பதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள், இதுதான் பிரச்சனை என்றால் அவர்கள் ஏன் டி வி டிக்கு அனுமதி கொடுக்கிறார்கள் என தெரியவில்லை , இப்படி வெளிநாடுகளில் அனுமதிக்க பட்ட டி வி டிக்கள் தான் இந்தியாவில் இறக்குமதியாகிறது.

                     இது போன்ற டி வி டி தயாரிக்கும் கும்பல் நோகாமல் நொங்கு தின்ன கதையாக படத் தயாரிப்பாளர்களின் முதலீட்டை உறிஞ்சிவிடுகிறார்கள்.இந்த திருட்டு டி வி டியால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள்  எத்தனையோ பேர் இன்று தமிழ்நாட்டில் உண்டு , இதை தடுக்க எத்தனை முயற்சித்தாலும் முடிவதில்லை , இதற்கு காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் இந்த திருட்டு வி சி டி க்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதுதான். இந்த ஆதரவுக்கு  என்ன காரணம்?? 



             

                       என்னை பொறுத்தவரை இதற்கு காரண காரணியாக இருப்பது திரைஅரங்குகள் தான், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் தான் . இன்றைய கால கட்டத்தில் ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பம் சினிமாவுக்கு போகவேண்டும் என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும், எங்கும் எதிலும் அநியாய விலை , பைக் நிறுத்த இருபது ரூபாய் , டிக்கெட் 150 ரூபாய் இது படத்திற்கு தகுந்தாற்போல் மாறும் , காபி இருபது ரூபாய் , பாப்கார்ன் ஐம்பதிலிருந்து இருநூறு வரை போகும் , பப்ஸ் நாற்பது ரூபாய் இப்படி எல்லாமே அநியாய விலை, அந்த படத்தை பார்க்க இந்த டிராப்பிகிலும் மனித கூட்டத்திலும் கடந்து செல்லவேண்டும்.இவை எல்லாம் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் நிலையில் உள்ள திரை அரங்குகள்.



              சற்று சுமாரான திரைஅரங்குகள் என்றால் சுகாதாரத்திற்கு கேட்கவே வேண்டாம், அங்கே போய் வந்தால் அனைத்து தொற்று நோயும் நம்மை வந்து சேரும் , இப்படி அநியாய விலையும் , சுகாதார சீர்கேடும் இருந்தால் எப்படி மக்கள் அங்கு சினிமா செல்ல ஆசைப்படுவார்கள் , முன்பெல்லாம் பொழுபோக்க சினிமாவே கதி இன்று அப்படி அல்ல ஷாப்பிங் என்ற பெயரில் வெளியே வந்து பொழுதை கழிக்கலாம். இதையெல்லாம் தாண்டி அவர்கள் போனாலும் நம்ம கதாநாயகர்கள் சுயதம்பட்டம் அடிக்கும் காத்து குத்தும் வேலைகள் மக்களை வெறுப்படைய வைக்கிறது, கதைக்காக நாயகர்களை தேடாமல் கதாநாயகர்களுக்காக கதையை ஒட்டவைக்கும் வேலையை செய்வதால் மக்களும் என்ன செய்வார்கள்.


            இதை எல்லாவற்றையும் விட வசதியான காரணங்கள் நிறைய உள்ளன, ஒரு டி வி டி யின் விலை இருபது ரூபாய் மட்டுமே , இப்போதெல்லாம் நல்ல தரத்துடன் 5:1 வசதியுடன் கிடைக்கிறது , அதிக அலைச்சல் இல்லை , வீட்டிலேயே வசதியாக பார்க்க முடியும், பிடித்த பகுதிகளை பல முறையும் பார்க்க முடியும், பிடிக்காத பகுதிகளை பார்க்காமல் தவிர்க்க முடியும்.இதற்கெல்லாம் தீர்வு நியாயமான கட்டணங்களும் , நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் தான் ஓரளவுக்காவது நல்ல மாற்றத்தை கொண்டு வரும் , மக்களும் படம் பார்க்க தியேட்டர் வருவார்கள் இல்லாவிடில் திரை அரங்குகள் எல்லாம் மண்டபங்களாவதை  யாராலும் தடுக்க முடியாது.   

அன்பன்
ARR