முத்தான கேள்விகளை கேட்டு அதையே வேள்வியாய் தொடரும் இந்த தொடர் பதிவை என்னை தொடர உத்தரவிட்ட என் நண்பன் RVS கட்டளைப்படி இதை தொடர்வதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன், நன்றி நண்பா
இனி என்னுடைய உள்ளப்பூர்வமான , உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் .
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
- தென்றல் தாலாட்டும் ஹரித்ராநதி வடகரை படித்துறையும் , நண்பர்களும் நட்பும் ,
- கல கலவென , கட கடவென கலக்கலாய் கழிந்த கல்லூரி நாட்கள்
- ராசிபுரம் செந்தில் , ஏர்போர்ட் ஸ்ரீனி யுடனான கோடம்பாக்கம் ராஜாராம் காலனி பேச்சிலர் வாழ்க்கை
- தன் குறை தெரியாமல் , தேவை இல்லாமல் தன் புத்திசாலிதனத்தை நிரூபிக்க மற்றவர்கள் மீது கருத்தை திணிக்கும் அறிவுரைவாதிகள்
- குடிகாரர்களும் , பக்கத்தில் குழந்தைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் இருந்தாலும் எதைப் பற்றியுமே கவலைப் படாமல் பொது இடங்களில் புகை பிடிக்கும் மடையர்கள்
- குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுக்கும் தாய்மை இல்லா பெண்கள்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
- மருத்துவமனை (ரத்தத்தை பார்த்தாலே ஐயா காலி )
- உடற்பயிற்சி (கொஞ்சம் இல்லை நிறையவே சோம்பேறி )
- மனைவி (நெசமாத்தான் )
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
- நாம் வாழும் பிரபஞ்சம்
- பிறந்த குழந்தையின் அன்னிச்சையான சுவாசம்
- பரிட்சையில கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க அதுல கொஸ்டீன் இருக்கு , ஆனா ஆன்சர் பேப்பர்ல ஆன்சர் இல்லையே ஏன் ?
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
- என் மகளின் வசீகரிக்கும் போட்டோ
- கிரடிட் கார்டு பில்கள்
- இலந்தவடை
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
- என் சகோதரர்கள் (டயமிங்கில் பின்னி பெடலடுப்பவர்கள்)
- ராசிபுரம் செந்திலின் குழந்தை தனம் (அவனே போன் பண்ணி மச்சி பிசியா இருக்கேன் அப்புறமா பேசுறேன் என்று போனை கட் பண்ணிடுவான், வீட்டிலிருந்து போன் வந்தாலும் சிகரட் வாசனை அடிக்க கூடாது என்பதற்காக வாய் கொப்பளிப்பான், நான்காம் வருடம் படிக்கும் இவனை இரண்டாம் ஆண்டு மாணவன் கூப்பிட்டு கேள்வி கேட்டாலும் நின்று பதில் சொல்லுவான் )
- வடிவேலு
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
- என்னுடைய டிரைனிங் அகடமிக்கு ப்ரோபைல் தயாரித்து கொண்டிருக்கிறேன்
- மனைவி தந்த சூடான சுவையான அடையை ரசித்து ருசித்து கொண்டிருக்கிறேன்
- என் டி சர்ட்டை நைட்டி போல போட்டு அங்கும் இங்கும் அலையும் என் மகளை பார்த்து பூரிக்கிறேன்
8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
- ஹரித்ராநதி வடகரையில் உள்ளடங்கிநாற் போல் ஒரு வீடு
- ஆதரவற்ற முதியோர்களுக்காக ஒரு இல்லம்
- கோபப் படாத கணவனாக
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
- இல்லையென வந்தவர்களுக்கு இருப்பதை கொடுக்க முடியும்
- என்மேல் தவறன தெரிந்தால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியும்
- கோபமாய் இருக்கும் என் மகளை சிரிக்க வைக்கமுடியும்
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
- காகித கதாநாயகர்களின் பன்ச் டயலாக்
- அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதிகள்
- குழந்தையின் அழுகை
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
- பொறுமை
- சிக்கனம்
- பிற பல மொழிகள்
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
- சின்ன வெங்காயம் நிறைய போட்டு நல்லண்ணை ஊற்றிய புளிக்குழம்பு
- புளியோதரையும் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு
- தேங்காய் சாதம் (துருவிய தேங்காயும்,நெய்யில் வறுத்த முந்திரியும் ஆஹா )
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
- நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - திரைப்படம் இரும்பு திரை
- உன்னை நானறிவேன் என்னை யன்றி யாரறிவார் - திரைப்படம் குணா
- வா வா என் தேவதையே - திரைப்படம் அபியும் நானும்
14) பிடித்த மூன்று படங்கள்?
- கர்ணன்
- ஹேராம்
- மொழி
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
- பணம்
- நொறுக்குத் தீனி
- அதிகாலை தூக்கம்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
- திறமையான தீந்தமிழில் படைப்புகள் படைக்கும் தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார்
மக்களின் மனதில் நாற்று நட்டு பாராட்டை பறிக்கும் சகோ நிரூபன் - உலகத்தின் அத்தனை விவரங்களையும் தன் நுனிவிரலில் வைத்திருக்கும் நண்பன் நுனிப்புல்லில் ஒரு பனித்துளி
அன்பன்ARR

