Monday 27 June 2011

என்னுயிருக்கு பிறந்தநாள்



என்னை ஆட்டுவிக்கும் பத்தாவது கிரஹத்திற்கு

நான் பயணிக்கும் ஒன்பதாவது திசைக்கு 

நான் இசைக்கும் எட்டாவது சுரத்திற்கு 

என்னை வழிநடத்தும் ஏழாவது அறிவிற்கு 

என் உணர்வறியும் ஆறாவது புலனிற்கு

நான் படிக்கும் ஐந்தாவது வேதத்திற்கு

நான் ரசிக்கும் நான்காவது தமிழிற்கு 

என்னுடைய மூன்றாவது கண்ணிற்கு 

என்னை அரவணைக்கும் இரண்டாவது தாய்க்கு 

என்னுடைய முதல் குழந்தைக்கு 


  
எல்லாமுமான என்னவளுக்கு
மாண்புமிகு மனைவிக்கு     
நல்லிதைய நளினாவிற்கு


பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


அன்புடன் 
உன்னவன்- உன்
உயிரானவன்.  

  

52 comments:

Yaathoramani.blogspot.com said...

சிவனை ஒளவையார் ஒன்று முதல் பத்து வரை
வரிசைப் படுத்திப்பாடி தன் பக்தியை
வெளிப்படுத்தியதைபோல
தங்கள் இல்லத்தரசியின் பால் தாங்கள் கொண்டுள்ள
அன்பினை வரிசைப்படுத்திப்பாடி அசத்தியுள்ளீர்கள்
அசத்தல் கவிதை
நீங்கள் தம்பதி சமேதராய் இதே அன்புடன்
பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
அன்பு சகோதரிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

அடேடே....புது மாதிரி வாழ்த்தி இருக்கீங்க...'எங்கள்' வாழ்த்துகளும் உரித்தாகுக...

(உங்கள் கமெண்ட் விண்டோவை ஆர் வி எஸ் ப்ளாக்கில் எல்லாம் திறப்பது போல மாற்றி விடுங்களேன்)

எல் கே said...

அருமை அருமை. உங்கள் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

நிரூபன் said...

சிறப்பான வாழ்த்துக் கவிதை, உங்களின் பாசப் பிணைப்பினை வெளிப்படுத்தி நிற்கிறது..

உங்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம்.

Unknown said...

மாஷா அல்லா -என்றால் இறைவன் நாடிவிட்டான் என்று பொருள் .யார் கண்ணும் படாமல் இருக்க நான் இதை சொல்வது வழக்கம் இன்று உங்கள் கவிதைக்கும் ஓர் கவிதைமேல் நீங்க கொண்டுள்ள அன்பிற்கும் சேர்த்து சொல்கிறேன் மாஷா அல்லா.

என் அருமை சகோதரி பல்லாண்டு வாழ்க பல கோடி இன்பம் பெருக என வாழ்த்துகிறேன் ...

குணசேகரன்... said...

அருமை ...அருமை ... வாழ்த்துக்கள்.. இன்னிக்கு உங்களுக்கு நிறைய gift கிடைக்கும் உங்க மனைவியிடமிருந்து

G.M Balasubramaniam said...

இப்படியெல்லாம் வாழ்த்தினால் அவர்கள் திக்குமுக்காடிப் போவார்கள், என்று நினைக்கிறேன். என் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். தயவு செய்து தெரியப் படுத்துங்கள்.

Unknown said...

tamil manam not working ... voted all

rajamelaiyur said...

Pls convey my wishes to sister

rajamelaiyur said...

Pls convey my wishes to sister

தமிழ் உதயம் said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..

ஷர்புதீன் said...

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், சந்தோசத்தை எல்லா வல்ல இறைவன் இன்று போல் என்று தர உளமார வேண்டுகிறேன்

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Unknown said...

அன்பு சகே
தங்களின் உயிரின் உயிரான,ஏன்,உயரினும் மேலான அவர்களுக்கு என்
உளங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு
எல்லாம் வல்ல வேங்கடவன் அருள் புரிய
வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

Madhavan Srinivasagopalan said...

வெயில் காலம்..
இவ்ளோ ஐஸ் தேவைதான்..

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@எல் கே
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
அது எப்படி என்று தெரியாமல் தான் விழித்துக்கொண்டு இருக்கிறேன் நண்பரே
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி
மாஷா அல்லா

சாகம்பரி said...

இனிய இல்லறத்தின் தலைவிக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@குணசேகரன்...
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்

A.R.ராஜகோபாலன் said...

@என் ராஜபாட்டை"- ராஜா
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@என் ராஜபாட்டை"- ராஜா
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@துளசி கோபால்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
ஹி ஹி ஹி..........

A.R.ராஜகோபாலன் said...

@சாகம்பரி
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் வாழ்த்துரையைப் படித்து அசந்து போனேன்.

மனைவிமேல் உள்ள தங்களின் அன்புக்கு வானமே எல்லையாகத் தோன்றுகிறது.

தங்களைக் கணவனாக அடைய மிகவும் கொடுத்து வைத்துள்ள தங்களின் துணைவியாருக்கு என், மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

voted 8 to 9 in Indli &
1 to 2 in Tamilmanam

ADHI VENKAT said...

கவிதை அருமை. உங்கள் மனைவிக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

RVS said...

பத்து இண்ட்டு பத்து = நூறு..
நூத்துக்கு நூறு இந்த வாழ்த்துக்கள் பதிவு. என்னுடைய வாழ்த்துக்களும் கோப்லி. ;-))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தமிழில் இத்தனை அருமையாய் ஒரு கவிதையை பிறந்த நாளுக்குப் பரிசாய் தந்த உங்களுக்கு என்ன பரிசு தரலாம்.....

உங்கள் துணைவிக்கு எனது சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள்....

இதில் இன்னொரு லாபமும் இருக்கிறது எனக்கு - என் பிறந்த நாள் உங்களுக்கு மறக்காது அல்லவா.... :)

A.R.ராஜகோபாலன் said...

@Riyas
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@RVS
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

Mathuran said...

உங்கள் வாழ்த்து அழகாகவும், வித்தியாசமாகவும் உள்ளது

உங்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம்..

இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

vidivelli said...

நீடூழி காலம் என்றென்றும் இன்பமுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அப்புறம் என்ன கொட்டலிலயா கொண்டாட்டம்...
என்ன பிறைஸ் வாங்கி கொடுத்தீங்க?

Unknown said...

வாழ்த்துக்கள்..!

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
என்னை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும் உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஜீ...
உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் கனிவான நன்றி

Anonymous said...

ஊ!.......!நல்ல வரிகள்! சூப்பர்!.....
Vetha.
http://kovaikkavi.wordpress.com
Denmark.

A.R.ராஜகோபாலன் said...

@kovaikkavi
நன்றி சகோதரி
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

நெல்லி. மூர்த்தி said...

மனைவியை நேசிப்பதில் மட்டுமல்ல அதனை வெளிப்படுத்துவதிலும் தங்களின் தனித்தன்மையினை உணர்ந்து மகிழ்கின்றோம்! ஆதர்ச புருஷனை மட்டுமல்ல அழகான கவிதைக்கும் சொந்தக்காரியான சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

A.R.ராஜகோபாலன் said...

@நெல்லி. மூர்த்தி
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு
முதல் வருகைக்கு

நகைச்சுவை-அரசர் said...

கவிதையில் நேசம் ஆழ இழையோடுகிறது.. பாராட்டுகள்.. தங்கள் துணைவியாருக்கு..!

ஒரு மனிதனைப் புரிந்துகொண்ட இல்லாள் அமைந்தால் உலகம் முழுதும் எதிர்த்தாலும் சமாளிக்கலாம் ; மாறாக அமைந்தால், எவர் ஆதரவு இருந்தும் பயனில்லை..

தன் நற்பாதியை, அதன் குறை நிறைகளோடு ஏற்று அன்புசெலுத்தும் மாந்தரின் இல்லறம் செழிக்கும்.. வாழ்த்துகள்.. இம்முறை தங்களுக்கும்..!

A.R.ராஜகோபாலன் said...

@நகைச்சுவை-அரசர்
உங்ளுடைய கருத்திற்கும் கனிவிற்கும் மனம் நிறைந்த நன்றி