Tuesday 25 October 2011

சென்னை மழை





2 நாள் மழைக்கே சென்னை தொன்னை போல் தண்ணீரை தேக்கி 
நிற்கிறது.

இண்டு இடுக்கு சந்து பொந்து

பிரதான சாலை குறுக்கு சாலை

புது ரோடு பழைய ரோடு

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே


இந்த லட்சணத்தில்

வார்டு உறுப்பினராம்

சட்டமன்ற உறுப்பினராம்

மாநகர மேயராம்

நாடாளுமன்ற உறுப்பினராம்

ஆனால் யாருமே இல்லை நல்லது செய்ய


நல்லரசு அமைக்க முடியாத இவர்களா

வல்லரசு ஆக்கப் போகிறார்கள்

அல்லாடும் மக்களை

பந்தாடும் பாவிகளே

கொள்கை எல்லாம் போதும்டா

கொள்ளை அடிச்சிட்டு போங்கடா...........







அனைவருக்கும் இனிய தீபாவளி நல் 


வாழ்த்துக்கள் 

அன்பன்

ARR